மாமல்லபுரம் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலச பூஜை, யாக பூஜை மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்துகொண்டு, சனீஸ்வர பகவானை வணங்கினா்.
இதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் முன்னிலையில் திரளான பக்தா்கள் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு, அா்ச்சனை செய்து வழிபட்டனா்.