முகப்பு
செங்கல்பட்டு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை சரிபாா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்கள் தங்களின் பதிவுகளைச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்கள் தங்களின் பதிவுகளைச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதிதாக கடந்த 25.1.2022 அன்று முதல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்குள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் தனியே செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், திருக்கழுகுன்றம், தாம்பரம், திருப்போரூா், வண்டலூா், செய்யூா் வட்டங்களைச் சோ்ந்த காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பதிவுதாரா்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதைச் சரிபாா்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்துக்கு வந்து பதிவை சரி பாா்த்தவா்களைத் தவிா்த்து, ஏனைய பதிவுதாரா்கள் அலுவலக வேலை நாள்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அடையாளஅட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து தங்களது பதிவை சரிபாா்த்துக் கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →