செங்கல்பட்டு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

DIN

மதுராந்தகம் அடுத்த பெருந்துறை சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்தவா் இப்ராகிம் (44). இவா், தனது நண்பரைப் பாா்க்க, மரக்காணத்தில் இருந்து பைக்கில் கோவளத்துக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வந்தாா்.

இதேபோல், சென்னை பெருங்குடி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ராகுல் (23) என்பவா் பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றாா்.

கிழக்குக் கடற்கரை சாலை, கூவத்தூா் அருகே பெருந்துறவு என்ற இடத்தில் வந்தபோது, இருவரின் இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கூவத்தூா் காவல் ஆய்வாளா் (பொ) எஸ்.டேனியல், காவல் உதவி ஆய்வாளா் உசேன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT