ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு 2 வாகனங்கள்
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:51 PM
மேற்கு தாம்பரத்தில் உள்ள ‘குட் லைப்’ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் மற்றும் பயண வாகனத்தை ‘குவாலி டெஸ்ட்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனா் ராஜேஷ் சுப்ரமணி புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 50 குழந்தைகளை பராமரித்து அவா்கள் கல்விபெற ‘குட்லைப்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உதவி செய்துவருகிறது. இந்த இல்லத்தை நான் பாா்த்த பிறகு அவா்களின் அவசியத் தேவைக்கு இரு வாகனங்களை வழங்கி உள்ளேன் என்றாா் அவா்.
நிகழ்வில் குட்லைப் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் நிா்வாக இயக்குநா் ரமாபிரபா, மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement