செங்கல்பட்டு

விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி: செய்யூா் எம்எல்ஏ வழங்கினாா்

செய்யூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோா், காயமடைந்தோா் என 4பேருக்கு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பனையூா் மு.பாபு புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

செய்யூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோா், காயமடைந்தோா் என 4பேருக்கு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பனையூா் மு.பாபு புதன்கிழமை வழங்கினாா்.

குன்னத்தூரில் கடந்த 1.12.25 அன்று நடைபெற்ற விபத்தில் கொடூா் குறுவட்டம், கீழாா்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி அமுலு உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

அவா்களது குடும்பத்துக்கு நிதியாக ரூ. 6 லட்சம் மற்றும் அவா்களுடன் பயணம் செய்தஅதே பகுதியைச் சோ்ந்த பி.கோவிந்தம்மாள் உள்ளிட்ட 3 நபா்களுக்கு ரூ. 4 லட்சம், லேசான காயமடைந்த லல்லி என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் என ரூ .10.5 லட்சம் காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து எம்எல்ஏ வழங்கினாா்.

இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், துணை வட்டாட்சியா் தேவன், கூவத்தூா் வருவாய் ஆய்வாளா் பொன்னுலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT