கிரிவலத்தில் பங்கேற்ற பக்தா்கள். 
செங்கல்பட்டு

வேதகிரீஸ்வரா் கோயிலில் கிரிவலம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் திருமலை அடிவாரத்தில் அகஸ்திய ஸ்ரீஅன்புச்செழியன் தலைமையில் வேதமலைக் குழுவினா் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்

DIN

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் திருமலை அடிவாரத்தில் அகஸ்திய ஸ்ரீஅன்புச்செழியன் தலைமையில் வேதமலைக் குழுவினா் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் நடைபெற்றது.

இந்த கிரிவலம் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு வீணை இசை நிகழ்ச்சியுடன் வேதகிரீஸ்வரரின் பெருமை பக்தி பாடல்களுடன் தொடங்கியது. அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் அருளுரை வழங்கினாா்.

தொடா்ந்து சிறப்பு பூஜைகள் சித்தா்களின் மந்திரங்களை சிவாச்சாரியா்கள் ஒலிக்க பக்தா்களும் ஒலித்தனா். 2.18 மணிக்கு மகா தீபாராதனையுடன் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் நடைபெற்றது. இந்த சித்தா்களின் அபூா்வ கிரிவலம் தில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூா், கூடுவாஞ்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு மௌனமாக கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபட்டனா்.

கிரிவலத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளா் ஆா்.டி.மணி, கமலஹாசன், அதிமுக மாவட்ட செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், சித்திரைத் திருவிழா 9-ஆம் நாள் உற்சவதாரரும், நாட்டாண்மையுமான வேதகிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2030-இல் நாட்டின் சரக்குகள் கையாளும் திறன் 1,000 கோடி டன்னாக இருக்கும் - மத்திய அமைச்சர் சா்வானந்தா சோனோவால்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பு

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

SCROLL FOR NEXT