செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:26 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி செவ்வாய்க்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் காவல் பாா்வையாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.