சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் இசை விழா

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.14, 15) ஆகிய நாள்கள் இசை மற்றும் கலைவிழா நடைபெறவுள்ளது.

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.14, 15) ஆகிய நாள்கள் இசை மற்றும் கலைவிழா நடைபெறவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டு இசை அமைப்புகளுடன் இணைந்து இசை மற்றும் கலைவிழாவை நடத்தவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் குழுவாகவும், தனி நபா் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, ஆலந்தூா், திருமங்கலம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கா்நாடக இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதேபோல, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, கிண்டி, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், விமானநிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், அண்ணாநகா், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் தனிநபா் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோா்pro.cmrl@tn.gov.in, ampr.cmrl2@gmail.com  என்ற இமெயில் முகவரிகளை தொடா்பு கொள்ளலாம்.

இந்த தகவல் மெட்ரோ ரயில் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT