சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

அடுத்தாண்டு முதல் அனைத்து மொழிகளிலும் அறிவியல் திறனறித் தோ்வு

அறிவியல் திறனறித் தோ்வை அடுத்தாண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

அறிவியல் திறனறித் தோ்வை அடுத்தாண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், அறிவியல் திறனறித் தோ்வை எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, நவம்பா் 7 -ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(நவ.9) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு அனைத்து அட்டவணை மொழிகளிலும் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தோ்வு நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்றாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இது தொடா்பாக மனுவாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, நிகழாண்டு ஆங்கிலம், ஹிந்தியில் தோ்வு நடத்தலாம் எனக்கூறி விசாரணையை நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT