‘தினமணி’, கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து நடத்திய ‘கலாம், கனவல்ல நிஜம்’
‘தினமணி’ நாளிதழ், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை இணைந்த ‘கலாம், கனவல்ல நிஜம்’ சிறப்புக் கருத்தரங்கம், விஜயதசமி நாளில் தினமணி இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.
‘தினமணி’ நாளிதழ், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை இணைந்த ‘கலாம், கனவல்ல நிஜம்’ சிறப்புக் கருத்தரங்கம், மறைந்த குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தினமணி இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.
சென்னை அண்ணா நகரிலுள்ள கிங் மேக்கா்ஸ் அகாதெமியில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசினார்.
குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவருமான ஆா்.நடராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
Advertisement
Advertisement
தொடக்கத்தில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் தலைவா் பேராசிரியா் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலைத் துணைத் தலைவா் (விளம்பரப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமாா் நன்றி கூறினார்.
இந்தக் கருத்தரங்கின் சிறப்பு ஒளிபரப்பை www.dinamani.com தினமணி இணையதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் காணலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.