சென்னை, திருவள்ளூரில் பரவலாக மழை
சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர், செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து கொண்டுள்ளது.
பரவலான மழையால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.