சென்னை

மாலைக்குப் பின் சென்னையில் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறை

DIN


சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

புயல் காரணமாக காற்று பலமாக வீசும் என்பதால், சென்னையில், தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதால் சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள காவலர்களுக்கு  சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, அவசியமின்றி வெளியே செல்வோரைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணி மேற்கொள்ளவிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT