கோப்புப்படம் 
சென்னை

மாலைக்குப் பின் சென்னையில் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறை

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

DIN


சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

புயல் காரணமாக காற்று பலமாக வீசும் என்பதால், சென்னையில், தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதால் சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள காவலர்களுக்கு  சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, அவசியமின்றி வெளியே செல்வோரைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணி மேற்கொள்ளவிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT