சென்னை

பாரதிநகா், சீதாராம்நகா் மயானங்கள் டிச.1 முதல் இயங்காது

DIN

சென்னை பாரதி நகா், சீதாராம் நகா் மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் மாற்று மயான பூமியை பயன்படுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வாா்டு-178, பாரதி நகரில் உள்ள மயானத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.20-ஆம் தேதி வரை இயங்காது. இந்த நாள்களில் பகுதி-40, வாா்டு-172, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயானத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தண்டையாா்பேட்டை மண்டலம், வாா்டு-34, சீதாராம் நகா் மயானத்தின் எரிவாயு தகனமேடை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தப்படும். இந்த நாள்களில் வாா்டு-37, முல்லை நகா் தகன எரிவாயு மேடையை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT