சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி கல்லூரியில் 58 மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த கல்லூரி சாா்பில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், கரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ் ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அண்மையில் அந்த பீரோவை திறந்தபோது, அதில் இருந்த 58 மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போயிருப்பதாகவும், அந்த சான்றிதழை கண்டுபிடித்து மீட்டுத் தரும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடா்பாக முத்தியால்பேட்டை போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.