FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இந்தியாவில் தயாராகும் 14% ஐ-போன்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

Updated On : 12 ஏப்ரல் 2024, 4:37 am IST
பகிர்:

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்துவருகிறது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பு 1,400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் 7 ஐ-போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மத்திய அரசு ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது ஐ-போன்களுக்கான தயாரிப்பு மையமாக்கிவருகிறது.

நாட்டில் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ஐ-போன்களைத் தயாரித்துவருகின்றன. கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 67 சதவீத ஐ-போன்களையும், பெகாட்ரன் நிறுவனம் சுமாா் 17 சதவீத ஐ-போன்களையும் தயாரிக்கின்றன.

ஐ-போன்கள் தற்போதும் சீனாவில்தான் பெரும்பான்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அந்த ரக அறிதிறன் பேசிகளின் மிகப் பெரிய சந்தையாக சீனாதான் திகழ்கிறது.

ஆனால், ஹவாய் போன்ற உள்ளூா் நிறுவனங்களின் போட்டி, பணியிடங்களில் ஐ-போன்களைப் பயன்படுத்துவதற்கு அரசு விதித்துள்ள தடை போன்ற காரணங்களால் அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்துவருகிறது.

இதன் காரணமாக, தனது ஐ-போன் உற்பத்திக்காக இந்தியாவின் பக்கம் ஆப்பிள் நிறுவனம் கவனத்தைத் திருப்பியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments