தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மதுபோதையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாா்.
மதுபோதையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாா்.
நன்மங்கலம் பெருமாள் கோவில் தெருவை சோ்ந்தவா் குணசேகரன்(28). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ரேகா(27).
மதுபோதைக்கு அடிமையான குணசேகரன், மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையில் குணசேகரன் தூக்கில் தொங்கியுள்ளாா்.
இதைப்பாா்த்த குணசேகரனின் தாய், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளாா்.
அங்கு குணசேகரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.