முகப்பு
சென்னை

3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்தது.

சென்னை

3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்தது.

Updated On : 17 ஜூலை, 2024 at 7:37 PM
பகிர்:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியாா் பள்ளி, மயிலாப்பூா் லஸ் சந்திப்பில் உள்ள தனியாா் பள்ளி, நீலாங்கரையில் உள்ள ஒரு தனியாா் பள்ளி என 3 பள்ளிகளுக்கு புதன்கிழமை அதிகாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகத்தினா், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அந்த மின்னஞ்சல், வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக, மயிலாப்பூா் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த தகவலின் அடிப்படையில் செம்மஞ்சேரியைச் சோ்ந்த சதீஷ் என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →