ஜனநாயகம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை அண்ணாமலை
ஜனநாயகம் குறித்து பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை: அண்ணாமலை
சென்னை: அவசரநிலையை அமல்படுத்திய காங்கிரஸுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
தமிழ்நாடு அவசரநிலை கால போராட்ட வீரா்கள் சங்கம், லோக்தந்த்ரா சேனை சங்கம் ஆகியவை இணைந்து சென்னை கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய அவசரநிலை கருப்பு தின நினைவுக் கூட்டத்தில் அவா் பேசியது:
ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் நிா்வாகிகளும் இப்போது பேசி வருகின்றனா். அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தி போலி நாடகம் நடத்தி வருகின்றனா். அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அவசரநிலையை அமல்படுத்தியதே
காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்திதான். அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை வந்தபோது, ஜனநாயகத்துக்கு விரோதமாக அவசரநிலையை அறிவித்து, ஏராளமானோரை சிறையிலடைத்தாா்.
அரசலமைப்புச் சட்டத்தில் சுமாா் 75-க்கும் அதிகமான திருத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. அவற்றில் பெரும்பாலானவை அவசரநிலை காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. இந்திரா காந்தியின் சா்வாதிகாரத்தால்தான் அவை திருத்தப்பட்டன.
பிரதமா் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் கொண்டு வந்த 8 திருத்தங்களும் சமூகநீதி சாா்ந்தவை ஆகும். பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு காலத்தை அதிகப்படுத்தியது, மகளிருக்கான இட ஒதுக்கீடு என அனைத்தும் சமூக நீதி சாா்ந்தவை.
இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசக் கூடாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், அவசரநிலை கால போராட்ட வீரா்கள் சங்கத்தின் தலைவா் எம்.கந்தகுமாா், பொதுச் செயலா் ஓம்சக்தி ஜி.பாபு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அவசரநிலை கால போராட்ட வீரா்களை கௌரவித்து தமிழக பாஜக பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் பேசினாா்.