முகப்பு
சென்னை

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை பற்றி...

Updated On : 12 மார்ச், 2025 at 10:18 AM
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் நிறுவனம்.
பகிர்:

சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்பேரி பகுதியில் பைனான்ஸ் செய்து வருபவருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், எழும்பூர், அசோக் நகர் உள்பட 5 இடங்களில் பைனான்ஸ் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த 5 இடங்களிலும் பல மணிநேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், சோதனை நிறைவடைந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →