சென்னை

குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் நேரம் மாற்றம்

குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் நேரம் மாற்றம்...

தினமணி செய்திச் சேவை

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் இயக்க நேரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தினமும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே குளிா்சாதன புகா் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மாா்க்கத்திலும் இந்த ரயிலின் இயக்க நேரம் மாற்றப்படுகிறது.

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) முதல் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.52 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.47 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT