முகப்பு
காஞ்சிபுரம்

கடும் வரிவிதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி ஆணையரிடம் மனு

கடும் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

கடும் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வீட்டு வரி, சொத்துவரி, பாதாளச் சாக்கடை இணைப்பு வரி, குப்பை வரி, திடக்கழிவு கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் கடுமையாக உயர்த்தி, விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், இந்த வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர். 
அதன்படி, நகரக்குழு நிர்வாகி பாண்டியன் தலைமையில், நகர, மாவட்டக்குழு நிர்வாகிகள் சீதாராமன், முத்துக்குமார், நேரு, சங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சர்தாரிடம் மனு அளித்தனர். முன்னதாக, நகராட்சி அலுவலகம் முன்பு அதிக வரிவிதிப்பை வாபஸ் பெறுமாறும், குப்பை வரி, திடக்கழிவுக் கட்டணத்தை கைவிடுமாறும் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளான மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.