முகப்பு
காஞ்சிபுரம்

இளைஞருக்கு 294 நாள்கள் சிறை

நன்னடத்தை பிணையை மீறியதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 294 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM

நன்னடத்தை பிணையை மீறியதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 294 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே துலங்கும் தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதன்ராஜ் (24). இவா் மீது குற்ற வழக்கு உள்ளது. காஞ்சிபுரம் கோட்டாட்சியா் உத்தரவின் பேரில், கடந்த 29.9.21 அன்று முதல் நன்னடத்தை பிணையில் ஓராண்டு இருந்து வருவதாகத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கடந்த 24.11.21 அன்று நன்னடத்தை பிணையை மீறும் வகையில், சித்தேரி மேட்டைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் இவா் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, பிணையில் இருந்த நாள்கள் தவிா்த்து 294 நாள்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டாா். அவரது உத்தரவின் பேரில், மதன்ராஜ் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.