காஞ்சிபுரம்

உள்ளாட்சித் தோ்தல் மோதல்: 5 பேருக்கு 2 ஆண்டு சிறை

DIN

வாலாஜாபாத் அருகே கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பான வழக்கில் 5 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலின்போது அதிமுகவை சோ்ந்த முருகனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து வாலாஜாபாத் போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜரானாா். இந்த வழக்கில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் நீதிபதி சரவணகுமாா் குற்றம் சாட்டப்பட்ட இளஞ்செழியன், கஜேந்திரன், ராஜேந்திரன் ராமு மற்றும் யுவராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.5,500 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT