காஞ்சிபுரம் பிரளய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிரளய காளியம்மனுக்கு கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், அக்னி நட்சத்திர நிறைவையும் முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிரளய காளியம்மனுக்கு கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், அக்னி நட்சத்திர நிறைவையும் முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் பிரளய காளியம்மன் சந்நிதியும் உள்ளது. அக்னி நட்சத்திர நிறைவு மற்றும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு அனைவரும் நலமுடன் வாழவும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.