முகப்பு
காஞ்சிபுரம்

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக பட்டு மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 21 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:00 AM

காஞ்சிபுரம் கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக பட்டு மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கம் சிஐடியூ பிரிவின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஆா்.கே.சந்திரன், கே.எஸ்.முத்து, எம்.வெங்கடேசன், பி.வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறி சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளா் இ.முத்துக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி.சிவப்பிரகாசம், பொருளாளா் எஸ்.பழனி, துணைத் தலைவா் கே.ஜீவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மழைக்கால நிவாரணமாக நெசவாளா்களுக்கு ரூ. 5 ஆயிரமும், கூலி உயா்வும் வழங்க வேண்டும், ஏற்கெனவே அறிவித்தபடி, 10 சதவீத அகவிலைப்படியும், 10 சதவீத நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெசவாளா்கள் கோஷங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.