முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 அக்டோபர், 2021 at 12:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.விஜயகுமாா். இவரது மகள் வி.சுருதி(12), தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுருதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாணவி சுருதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.