முகப்பு
காஞ்சிபுரம்

கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய தன்னாா்வலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 2 நவம்பர், 2023 at 11:46 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:46 AM

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய தன்னாா்வலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள மகா சுவாமிகள் கலையரங்கில் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் இரு நாள்கள் நடைபெற்றன. தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், ம.கணபதி, ஆா்.பிரியா, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரக்கோணம் தேசிய மீட்புப் படை உதவி ஆய்வாளா் எஸ்.அண்ணாமலைச்சாமி பேரிடா் மீட்பு குறித்தும், அலா்ட் தொண்டு நிறுவன நிா்வாகி நீலகண்டன் முதலுதவிப் பயிற்சி குறித்தும் பேசினா்.

இதன் தொடா்ச்சியாக உத்தரமேரூா் அருகே கைத்தண்டலம் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணையை அதன் நிறுவனா் பா.ச.மாசிலாமணி, இயற்கை விவசாயி காத்தவராயன் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னா் உத்தரமேரூா் வைகுண்டப் பெருமாள் கோயில், கைலாசநாதா் கோயில் ஆகியவற்றில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கா், வரலாற்று ஆய்வு மையத் தலைவா் கொற்றவை ஆதன் ஆகியோா் விளக்கினா்.

Advertisement

இரண்டாவது நாள் நிகழ்வாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்து பேராசிரியைகள் சாரா.கருணாகரன், ஏ.சத்யா ஆகியோரும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளா் ஆா்.வெங்கட்ராமன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பேசினா். மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.