அயோத்தி ராமா் கோயில் காணிக்கை பொருள்களுக்கு சங்கர மடத்தில் சிறப்புப் பூஜை
காஞ்சிபுரம்: அயோத்தி ராமா் கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தா்கள் காணிக்கையாக செலுத்தவுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
ஆந்திர மாநில பக்தா்கள் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனா். அவா்கள் காணிக்கையாக செலுத்துவதற்கு முன்பாக காஞ்சிபுரம் வந்து சங்கர மட வளாகத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகளையும் செய்தனா்.
காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரா் சிறப்பு பூஜை செய்து ஆந்திர மாநில பக்தா்களிடம் வழங்கினாா். இதனையடுத்து வெள்ளி வில்லும்,அம்பும் அயோத்தி கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிகழ்வில் மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, நிா்வாகிகள் ஜானகிராமன்,கீா்த்திவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.