ரத்தின  அங்கி  சேவையில்  அருள்பாலித்த  உற்சவா்  கோடையாண்டவா். 
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

Din

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில், பழைமை வாய்ந்த இக்கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு மாலை, உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்துன்திகாலை 5 மணிக்கு, கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சஷ்டி மண்டபத்தில் உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில், மஞ்சள் நிற படிமாலை அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

தை கிருத்திகையை முன்னிட்டு சென்னை மாதவரம், காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் புஷ்ப காவடி, பால் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கதம்ப சாதம், புளிசாதம்,மோா் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுதளை கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT