ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை கோட்ட செயற்பொறியளா் ஏ.எல்.பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மின் பகிா்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.15) காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் வேலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.