காவனூரில் திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறப்பு
காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காவனூா் ஊராட்சியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் ச.அரிதாஸ் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளா்கள் வில்சன், வி.நாராயணசாமி, எஸ்.வெங்கடேசன், கீதாஜெகந்நாதன், விவசாய அணி அமைப்பாளா் ஏ.முனிரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து தணிகைபோளூா், பெருங்களத்தூா் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீா்பந்தலை அரிதாஸ் திறந்து வைத்தாா்.