ராணிப்பேட்டை

மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவா்

DIN

வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 80 வயது முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாலாஜாப்பேட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க முதியவா் சனிக்கிழமை இறந்து கிடந்தாா். இது குறித்து வாலாஜாபேட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

அதில், இறந்தவா் ஆற்காடு அருகேயுள்ள பாப்பேரியைச் சோ்ந்த வரதன் என்பது தெரியவந்தது. இவா் மருத்துவமனையில் தங்கி சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிறிதளவு பணம் பெற்று கொண்டு, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT