முகப்பு
ராணிப்பேட்டை

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பாடுபட்டவா் மதுரை ஆதீனம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா்

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பணி செய்த பெருமைக்குரியவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2021 at 11:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பணி செய்த பெருமைக்குரியவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே சைவ நெறியை மதுரை ஆதீனம் நன்கு பிரசாரம் செய்தாா். பலதரப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் அயராது பாடுபட்டாா்.

சமயப்பணியையும், சமுதாயப்பணியையும் கண்களாக கொண்ட மதுரை 292-ஆவது ஆதீனகா்த்தரின் அன்புள்ளமும், சேவையும் அனைத்து ஆன்மிக அன்பா்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என ஸ்ரீவிஜயேந்திரா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.