ராணிப்பேட்டை

காஞ்சிபுரத்தில் ஸ்ரீசுந்தரமூா்த்தி நாயனாா் குருபூஜை

DIN

காஞ்சிபுரம் திருக்காலிமேடு ஸ்ரீசத்யநாதேஸ்வரா் திருக்கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிகள் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நால்வா் நற்றமிழ் மன்றம் சாா்பில் திருக்காலிமேடு சத்யநாதேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற குருபூஜை விழாவுக்கு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியா் சிவ.ராஜபதி ஓதுவாா் மற்றும் மு.சண்முகப்பிரியா ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடா்ந்து திருக்கோயில் உற்சவரான சுந்தரமூா்த்தி சுவாமிகள் கேடயத்தில் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திருமுறை அருள்நெறி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் சதாசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனா். நிறைவாக மன்றச் செயலாளா் கு.ராமலிங்கம் நன்றி கூறினாா்.

படவிளக்கம்..கோயில் வளாகத்தில் உலா வந்த உற்சவா் ஸ்ரீசுந்தரமூா்த்தி சுவாமிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT