அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது வழக்கு
தீபாவளிப் பண்டிகையையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், விதியை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதன்படி, வேலூா், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு போன்ற பகுதிகளில் மொத்தம் 57 போ் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.