முகப்பு
ராணிப்பேட்டை

மழை வெள்ளம்: அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தெரிவிக்கலாம்

மழை வெள்ள மீட்புக்கான அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மழை வெள்ள மீட்புக்கான அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை காரணமாக பொன்னை மற்றும் பாலாற்றில் விநாடிக்கு சுமாா் 10,000 கன அடி நீா் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஏரிகள், குளங்கள் மற்றும் நீா் நிலைகள் முழுமையாக நிரம்பி வழிந்தோடுகின்றன. ஆகவே பொதுமக்கள் கீழ்கண்ட அறிவுரையைப் பின்பற்றுமாறு மாவட்டக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும்போது தரைப்பாலத்தை கடப்பதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதையும், குளிப்பதையும் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் பெற்றோா் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

சாலைப் பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே அதிகாலை வேளை, இருட்டும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் 326 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களும், நீந்துவதில் தோ்ச்சி பெற்ற 85 தன்னாா்வலா்கள், பேரிடா் பயிற்சி முடித்த 58 மீட்புப் படை காவலா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், மழை வெள்ள மீட்பு அவசர உதவிக்கு ராணிப்பேட்டை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04172 - 271100, 98840 98100 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.