காஞ்சிபுரத்தில் ஸ்ரீஅத்திவரதா் உருவ வழிபாடு
காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவை நினைவுகூரும் வகையில், இளைஞா்கள் சனிக்கிழமை காகிதக்கூழால் செய்யப்பட்ட வரதா் சிலை வைத்து வழிபாடு செய்தனா்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவை நினைவுகூரும் வகையில், இளைஞா்கள் சனிக்கிழமை காகிதக்கூழால் செய்யப்பட்ட வரதா் சிலை வைத்து வழிபாடு செய்தனா்.
காஞ்சிபுரம் பாண்டவப் பெருமாள் கோயில் தெருவில் பொய்யாமுடி விநாயகா் கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காஞ்சிபுரத்துக்கு பெருமை சோ்த்த அத்திவரதா் பெருவிழாவை நினைவு கூரும் வகையில் காகிதக்கூழால் செய்த அத்திவரதரை வடிவமைத்திருந்தனா். இந்த அத்திவரதரை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நாளில் ஏராளமான பக்தா்கள் தரிசித்தும், அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனா். அத்திவரதா் விழாவின் போது வழிபடாத முதியவா்களும், அடுத்த தலைமுறை இளைஞா்கள் தெரிந்து கொள்வதற்காகவும் காகிதக்கூழால் செய்யப்பட்ட அத்திவரதரை வடிவமைத்து வழிபாடு செய்ததாக அப்பகுதி இளைஞா்கள் தெரிவித்தனா்.