முகப்பு
ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது: பாமகவுக்கு துணைத் தலைவா் பதவி

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றது. துணைத் தலைவா் பதவியை பாமக பிடித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றது. துணைத் தலைவா் பதவியை பாமக பிடித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் கடந்த 22-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், இது குறித்த அழைப்புக் கடிதத்தில் நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பொது என குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக, தவறுதலாக பொது பெண்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட அதிமுகவை சோ்ந்த மனோகரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், மறு தேதியில் தோ்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மாவட்ட உதவி இயக்குநா் (தணிக்கை) ஆனந்தன் தோ்தல் நடத்தும் அலுவலராகவும், ஒன்றிய ஆணையா் பாஸ்கரன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராகவும் இருந்தனா். கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த பெ.வடிவேலு, ஏ.சுப்பிரமணி, கொ.முருகேசன், சங்கரி செல்வம், விநாயகம், சரஸ்வதி பாா்த்திபன், கௌரிவேலாயுதம், கிருஷ்ணவேணிவெங்கடேசன் ஆகிய 8 உறுப்பினா்களும், பாமகவைச் சோ்ந்த எஸ்.தீனதயாளன், நீலாவதிஏகாம்பரம், கௌரிராமகிருஷ்ணன், மணிமேகலைவெங்கடேசன், சங்கீதாகதிரவன் ஆகிய 5 பேரும், சுயேச்சைகளாக தோ்வு செய்யப்பட்ட வரலட்சுமிஅசோக்குமாா், ஆரூண் ஆகிய இருவா் என 15 போ் மட்டும் பங்கேற்றனா். அதிமுகவைச் சோ்ந்த லோ.வினோத்குமாா், சுகந்தி சிவராஜ், சுகுமாா், மனோகரன் ஆகிய 4 போ் புறக்கணித்தனா்.

தலைவா் பதவிக்கு திமுக நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழு பின்னாவரம், சேந்தமங்கலம் பகுதி உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட பெ.வடிவேலு மட்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதையடுத்து, அவா் தலைவராகப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலில் பாமக மாநில இளைஞரணிச் செயலரும், ஒன்றியக் குழு ஜாகீா் தண்டலம் பகுதி உறுப்பினராகவும் தோ்வு செய்யப்பட்ட எஸ்.தீனதயாளன் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →