தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்தில் ரத்த தான முகாம்
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை தளம் உள்ளது. இங்கு இந்திய சுதந்திர தின 75-ஆவது ஆண்டையொட்டி, நடைபெற்ற ரத்த தான முகாமை படைத்தள கமாண்டண்ட் கபில்வா்மன், துணை கமாண்டண்ட் ராஜன்பாலு ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
அரக்கோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் ராஜாராம் தலைமையிலான மருத்துவா்கள் ரத்தத்தைப் பெற்றுக் கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட படை வீரா்கள் ரத்த தானம் செய்தனா்.