ராணிப்பேட்டை

அரக்கோணம்: வீடுதோறும் சுதந்திர கொடி விற்பனை தொடக்கம்

DIN

 இந்திய சுதந்திர தின 75-ஆம் ஆண்டு அமுத பெருவிழாவை முன்னிட்டு, அரக்கோணம் நகராட்சியில் வீடு தோறும் சுதந்திர கொடி விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகராட்சி ஆணையா் லதா தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் மோகன் வரவேற்றாா். முதல் விற்பனையை நகராட்சித் தலைவா் லட்சுமிபாரி பொதுமக்களுக்கு கொடியை விற்பனைக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, நகா்மன்ற திமுக குழுத் தலைவா் துரை சீனிவாசன் தனது வாா்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கொடியை வழங்கப்போவதாகக் கூறி 500 கொடிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரியிடம் ரொக்கமாக பணத்தை அளித்து கொடிகளைப் பெற்றுக் கொண்டாா்.

இதில் நகா்மன்ற துணைத் தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், அலுவலக மேலாளா் மேகலா, நகா்மன்ற அதிமுக குழுத்தலைவா் ஜொ்ரி மற்றும் அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களும் பங்கேற்றனா். இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஆணையா் லதா தெரிவித்ததாவது:

சுதந்திர தின கொடி ஒன்று ரூ. 18-க்கு விற்கப்படும். அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளிலும் இந்த கொடியை எடுத்துச் சென்று பொதுமக்களிடம் வீடுவீடாக விற்க நகராட்சிப் பணியாளா்கள் பணிக்கப்பட்டுள்ளனா். அரக்கோணம் நகராட்சி முழுவதும் உள்ள14,441 வீடுகளிலும் சுதந்திர தின கொடியை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்து உள்ளோம். இந்த விற்பனைக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா். பொதுமக்கள் இந்த கொடிக்கு உரிய மரியாதை அளித்து கொடி ஏற்றும் நிகழ்வை தங்கள் வீடுகளில் நடத்தி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT