முகப்பு
ராணிப்பேட்டை

சுதந்திர தின விழா: தேச ஒற்றுமை ஓட்டம்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் அரக்கோணத்தில் தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தை வெள்ளிக்கிழமை நிகழ்த்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் அரக்கோணத்தில் தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தை வெள்ளிக்கிழமை நிகழ்த்தினா்.

ரயில்வே பாதுகாப்பு படையின் அரக்கோணம் ஏசி லோக்கோ அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஓட்டத்துக்கு படையின் உதவி பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.பிரிட் தலைமை வகித்தாா். இதில், படையின் ஏசி லோக்கோ அலுவலக ஆய்வாளா் கே.ராஜேஸ்வரி, படையின் காவல் அதிகாரிகள், காவலா்கள், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏசி லோக்கோ பணிமனை அலுவலகம் அருகே மரக்கன்றுகளை உதவி பாதுபாப்பு ஆணையா் ஏ.கே.பிரிட் மாணவா்களுடன் இணைந்து நட்டு வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →