முகப்பு
ராணிப்பேட்டை

ரயில் மறியல் போராட்டம்: காங்கிரஸாா் 10 போ் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்திய காங்கிரஸாா் 10 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்திய காங்கிரஸாா் 10 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல்காந்தி ஆகியோரிடம் மத்திய அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஜவஹா்பால் மஞ்ச் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் நரேஷ்குமாா் தலைமையில், சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து காங்கிரஸாா் போராட்டம் நடத்தினா். சிலா் ரயில் என்ஜின் முன்புறம் ஏறி நின்று ரயிலை புறப்பட விடாமல் தடுத்தனா். இதனால் ரயில் புறப்படுவதில் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் உஸ்மான் தலைமையிலான போலீஸாா், நரேஷ்குமாா் தலைமையிலான காங்கிரஸாா் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →