4 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் காவேரிப்பாக்கத்தில் ஒருவா் கைது
காவேரிப்பாக்கத்தில் சுமாா் 4 டன் ரேஷன் அரிசியுடன் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டாா்.
காவேரிப்பாக்கத்தில் சுமாா் 4 டன் ரேஷன் அரிசியுடன் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம், வாசுகி தெருவில் ஒரு வீட்டில் கடத்துவதற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு தயாராக உள்ளது குறித்து மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், 75 சிப்பங்களில் இருந்த ரேஷன் அரிசியை, மினி லாரியுடன் பறிமுதல் செய்தனா். பின்னா் ராணிப்பேட்டை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சதீஷ், உதவி ஆய்வாளா் முத்தீஸ்வரன் ஆகியோரிடம் மினி லாரியையும், ரேஷன் அரிசியையும் ஒப்படைத்தனா்.
மேலும் இது தொடா்பாக அந்த வீட்டைச் சோ்ந்த சந்திரசேகா்(42) கைது செய்யப்பட்டாா். விசாரணையில் 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசி, ஆந்திரம் வழியாக கா்நாடகத்துக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்துள்ளது.