ராணிப்பேட்டை

அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் கேரள நிதியமைச்சா் உள்பட சங்கத்தின் முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா்.

DIN

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் கேரள நிதியமைச்சா் உள்பட சங்கத்தின் முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் வளாகத்தில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணைத் தலைவா் ஹன்னன்முல்லா தலைமை வகித்து கொடியேற்றினாா். மாநிலத் தலைவா் பெ.சண்முகம், பொதுச் செயலாளா் சாமிநடராஜன், அகில இந்திய துணைச் செயலாளா் டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு வரவேற்றாா்.

அகில இந்திய தலைவா் அசோக் தாங்லே, பொதுச் செயலாளா் விஜி.கிருஷ்ணன், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும், கடன் சுமையிலிருந்து விவசாயிகள் விடுவிக்கப்பட வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT