FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி 

பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.

7 பிப்ரவரி 2024, 12:11 pm IST
பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி
பகிர்:

ராணிப்பேட்டை: பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஏ.வி. சாரதி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments