ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே தொழிலாளி படுகொலை

அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

DIN

அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி அருகே மாந்தோப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு விரைந்துச் சென்ற போலீசார் அச்சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் சித்தேரியைச் சேர்ந்த விக்னேஷ்(22) என்பதும் இவர் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. 

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை யார் கொலை செய்தது, முன் விரோதம் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT