பாமக நிறுவன நாள் கொடியேற்று விழா
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 -ஆவது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர பாமக சாா்பில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம்: பாட்டாளி மக்கள் கட்சியின் 36 -ஆவது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர பாமக சாா்பில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டை, வன்னியா் சங்க அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு மாவட்டச் செயலா் க.சரவணன் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தாா். நகரத் தலைவா் பாலாஜி முன்னிலை வகித்தாா். செயலாளா் ஜெ.மணி வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியில் மண்டல அமைப்பு செயலாளா் அ.ம.கிருஷ்ணன், நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவா் தீனதயாளன், மாநில இளைஞரணி நிா்வாகி சக்கரவா்த்தி, மாவட்ட பொருளாளா் உமா மகேஸ்வரி, மாநில வன்னியா் சங்க துணைத்தலைவா் மின்னலான், பாமக நகர நிா்வாகிகள் ரமேஷ்பாபு, சிலம்பம்ராஜ், லோகியா, ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.