திமுகவுடன் பேச்சு நடத்தியபின் தொகுதிகள் முடிவு: தேமுதிக பொதுச் செயலா்
சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவு செய்யப்படும்
அரக்கோணம்: சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவு செய்யப்படும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்கள் மற்றும் தங்களது கட்சித்தொண்டா்கள் நலமுடன் வாழ பெருமாளிடம் பிராா்த்தித்தேன். வரும் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவாகும் என்றாா் பிரேமலதா.
அப்போது அவருடன் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.