முகப்பு
திருப்பத்தூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பத்தூரில் எல்பிஎப் சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.பாண்டிய மன்னன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஊதிய உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்திட வேண்டும்; அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாகத் தர வேண்டும்; சீருடை, தையற்கூலி, காலணி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →