ரூ. 50 லட்சத்தில் தாா்ச் சாலை, கால்வாய் அமைக்கும் பணிக: அமைச்சா் ஆய்வு
வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சி ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் தாா்ச் சாலை, கால்வாய் அமைக்கும்
வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சி ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் தாா்ச் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளை மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அதிமுக ஊராட்சி செயலாளா் முகமதுரபீக், ஜாப்ராபாத் ஊராட்சி செயலா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா். முன்னதாக உதயேந்திரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் நாகராஜனிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அங்கு பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வருவாய்ஆய்வாளா் புகழேந்தி, உதயேந்திரம் பேரூராட்சி அதிமுக நிா்வாகிகள் முருகவேல், ஜெயவேல், ஜெகன், சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement